Friday, 23 August 2013

காதலை உணர்ந்த காகிதம் ...

திக்கி திக்கி வார்த்தைகள் விழுந்தது உன் முன்னால்
விழுந்த வார்த்தைகளை எடுத்து கோர்த்தேன் கவிதையாய்
எடுத்து விரித்து படித்தேன் என் காதலை....
நீ அறியா  காதலை அறிந்து துடித்தது என் காகிதம்....  

Waiting for you

நீ என்னை தவிர்க்கும் ஒவ்வொரு நிமிடமும்
நான் உன்னை வந்தடைகிறேன் ..
உன் வாழ்கை நான் என்ற எண்ணம் வரும்
நேரம் நோக்கி நடைபோடுகிறேன் என் காதல் வலியுடன்


Feel My Love...

காலங்கள் நகர நகர 
   காத்திருப்பு கூட சுகமானது
காத்திருக்கிறேன் நான் உன் இதயகூட்டில் 
    குடியேறும் நாட்களுக்காக .....

Saturday, 10 August 2013

பெண்ணை பற்றி ஆண் எழுதும் கவிதை

உன் கண் ஒன்று போதுமே என்னை பற்றி பேச...
உன் இதழ் ஒன்று போதுமே என் அன்பை  சொல்ல...
உன் மௌனம் ஒன்று போதுமே என் காதலை உணர..
உன் குரல் ஒன்று போதுமே என் பெயரை இசைக்க...
அடி என்ன பெண்ணே செய்தாய் என்னை ??.
காத்திருக்கிறேன் நான் உன்னோடு சேர்ந்து வாழும் நாட்களுக்காக .....

தந்தை நீயே ...

தியாகத்தின் திருஉருவம் நீயே
வெற்றிக்கு பதை காட்டி
தோல்விக்கு தோள் கொடுத்து
என்றுமே என் முதல் நண்பனாய்
திகழும் என் தந்தைக்கு தலைவணங்குகிறேன்!!!

உலகம் சொல்லும் ஓர் மொழி அம்மா

தாரத்தை நெஞ்சில் கொண்டு 
        தாரத்தின் சிசுவை கருவில் சுமந்து 
பத்து மாதம் வெற்றி நடை போட்டு 
 இவ்வுலகிற்கு புதிய தலைமுறையை படைத்த 
        தேவதையே என் அம்மா !!!

போராளி

உண்மையில் உயர்பவன் உழைப்பாளி !
உழைப்பில் உயர்பவன் போராளி !!!

Tuesday, 6 August 2013

எழும் தோழர்களே !!!

திறமை இருந்தும் இருளால் சூழ்ந்திருக்கும் இளைஞர் கூட்டங்களை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது ... இவ்வுலகம் நம்மை எப்போது காணப்போகிறது என்று எதிர்பார்த்து காலம் கடந்தது தான் மிச்சம் ..
                        நம் எதை சாதித்தோம் ??? எதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ?? எதை சாதிக்க போகிறோம்?? நமக்குள் இருக்கும் திறமை தான் என்ன??? நம் நாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் ??? அட முதலில் நம் வீட்டிற்கு என்ன செய்தோம் ?? நம்மை ஏன் இவ்வுலகம் நிராகரிக்கிறது ?? வேலை இல்லா திண்டாட்டம் நம் குற்றமா?? இல்ல இந்த  சமுதாயத்தின் குற்றமா? நம்முள் சிலருக்கு இவ்விதமான கேள்விகள் எழும்...
                   ஆம் நீயும் இக்கேள்விகளின் நாயகனாக இருந்தால் நீ தான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி... வேலை இல்லை , நாம் யாருக்குமே ப்ரோயோஜனம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிவோம் ..                    "நேர்மை ,உண்மை ,பொறுமை,"இவை மூன்றுமே உன்னை உயர்த்தும்...நீ ஒரு வழிகாட்டி என்பதை மட்டும் மறந்து விடாதே... எழும் தோழா ! நாம் தோல்வியை ஏமாற்றும் நேரம் நெருங்கி விட்டது ... இனி நம் வாழ்கை நம் கையில் என்பதை உணர்வோம் ....
                " வெற்றியையும் ,தோல்வியையும் நம் உயிர் தோழர்களாக எண்ணுவோம் ..பின் அவைகளை என்றுமே விட்டுகொடுக்கமாடோம்" ....
                                                                                                               உங்கள் தோழி 
                                                                                                                சீதா லக்ஷ்மி 

இளைஞனின் துடிப்பு

திறமையை கண்டு வேலை கொடு 
கல்வியின் மதிப்பெண்ணை கொண்டு மதிப்பிடாதே ....
புத்தகத்தில் படித்தவனை விட ...அனுபவத்தில் படித்தவனே ஞானி ஆகிறான் 

Monday, 5 August 2013

கனவின் உயிர் நாடி !

சொக்கி கிடக்கும் சிந்தையில் மந்தையாய் தோன்றும் கனவுகள் 
  கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் கருவியாய் நானிருந்தால் 
                         நானே கடவுளாயிருப்பேன்  ................

வாழ்வின் தேடல் !

தேடலை நோக்கி நடைபோடு !
         வாழ்வே தேடல் என்பதை உணர்வாய் ...
தோல்வியை கண்டு அஞ்சாதே !
         வாழ்வின் வெற்றிக்கு முதற்படி என்பதை உணர்வாய் ...
ஏமாற்றம் கொண்டு துவளாதே !
         பிறர்க்கு வழிகாட்டி நீ என்பதை உணர்வாய் ...