Tuesday, 16 April 2013

கனவில் கொண்ட மயக்கம் ..

நம் விழிகள் செல்ல சண்டை போடுதோ !!
மௌனம் மட்டும் சத்தமாய் உரையாடுதோ !
என் பத்து விரல்களும் துடிக்கிதே உன் பத்து விரல்களுடன் சேர்ந்திட !
என் இரு கரங்களும் எழும்புதே  உன் இரு மார்பில் சேர்ந்திட !
தேனில் ஊறிய அமிர்தமாய் என் இதழ்கள் காதுகிடந்திட !
அருகில் நீ வரும்போது கலைந்திடுதே அந்த அற்புத தருணம் ........
                                                                                                              ---என் கனவில் 

விழியின் வெளிச்சம் நீயே ...


இருளில் மூழ்கிய என்னை உன் இமையோடு சிறை பிடித்தாய் ...
காலை பனிப்போல்  என்னை உன் மடியில் உரையச் செய்தாய் ...
கிழக்கில் சூரியன் நீயே,,,
என் வெளிச்சம் தருவாய் நீயே...
வருவாய் நீ என நினைத்தேன்...பின் சென்றாய் என் உயிர் உள்ளே ,...
உலகின் பல மொழி அறியேன் ...ஆனால்
உன் மௌன மொழி மட்டும் என் நெஞ்சில் ...

எங்கே எங்கே போகுது என் இமைகள்...
உன்னை தேடி தேடி தோய்ந்தது கருவிழிகள் ....
சட்டென்று வந்தாய் என் முன்னால் , பின்பு
பட்டென்று அடைந்தது என் நெஞ்சம் ...
வார்த்தைகள் துள்ளுதே என் நாவடியில் ...
என்னென்று பார்த்தால் நான் உன் மடியில்...

நன்று.....

காட்டிய  பாதைக்கு நன்று ...
என் உயிர் காதலுக்கு வழி கொடுத்து மறைந்ததற்கு நன்று ...
உன் சிறையின் கைதியாய் இருந்த என் உணர்வை
விடுதலை செய்தமைக்கு நன்று ....
வலி பட்ட என் உணர்வை உன் வஞ்சம் புகுத்து ஆற்றுகிறேன் ....
நன்று ..... நன்று.....  நன்று ......

கானல் நீர் ......

வாழ்கையில் கானல் நீராய் இருந்த நீ  
ஏன் என்னை கண்ணீரில் உறைய வைத்தாய் ....

கடல் அலை .......

புயலடித்து ஒய்ந்த என் உயிரில் ....
      புது பாதையாய் பதிந்தாய் ......
பதித்த உன் கால் தடங்கள் நெஞ்சில் பதியும் முன்பு 
      கடற்கரை மண்ணில் பதித்தாய்  ....
கடந்த நினைவுகள் அலை போல் எழும்பி 
      என்னை ஆழ்கடலில் மூழ்கடிக்க ..
மறக்க நினைக்கும் என் நெஞ்சம் 
     இன்னும் நீச்சல் தெரியாமல் தத்தளிக்கின்றது 
அவை என்று கரையை கடகின்றதோ 
    அந்த நாளை நோக்கி என் பயணமும் நகர.....